Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 3

கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுர கவி, சித்திர கவி என நான்கு வகை உள்ளன.
ஆசு கவி - உடனடியாக விரைவாக இயற்றப்படும் கவிதை வகையினரை இவ்வாறு பிரிக்கலாம்.
வித்தார கவி - வ்¢ரிவாக விளக்கமாக இயற்றப்படும் கவிதை

மதுர கவி - இனிமையான குரலில் பாடக்கூடிய கவ்¢தை
சித்திர கவி - ஓவியங்கொண்டு புனையப்படும் கவிதை

இனி எழுத்தின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஐகாரக் குறுக்கம்

ஐ என்பது நெடில் எழுத்து. இவற்றுள் பை, நை, ஐவர், தை மாதம் போன்றவற்றிலுள்ள பை, நை, ஐ, தை ஆனது 2 மாத்திரை கொண்டு விளங்கும். ஆயினும் சில இடங்களில் இவ்வெழுத்துத் தன் இயல்பான இரண்டு மாத்திரையை வ்¢டக் குறைந்து ஒலிக்கும். இது ஐகாரக்குறுக்கம் ஆகும். தைத்து, பைத்து, கைத்து ஆகிய சொற்களில் தை, பை, கை ஆகிய எழுத்துக்கள் தன் இயல்பான இரண்டு மாத்திரையை விடக் குறைவாக ஒலிப்பதைக் காணலாம்.

(வாசித்து பயிற்சி பெறுக!)

ஆய்தம்

ஆய்த எழுத்தும் செய்யுளுக்கு உறுப்பாக வருவதாகும். இது குறில் எழுத்தை அடுத்தும், உயிரெழுத்தோடு கூடிய வல்லின மெய் எழுத்துக்கு முன்னும் வரும்.

எ.டு : அ·து, இ·து, எ·கு, வெ·கா.

குற்றியல் உகரம்

உகர எழுத்து1யின் முதல் எழுத்தாக உயிரெழுத்து வருமானால் அது புணரும் போது தனக்குரிய ஒரு மாத்திரையைவிடக் குறைந்து ஒலிக்கும். இதன் அளவு அரை மாத்திரையாகும். இதனை
"உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்" எனச்சூத்திரம் காட்டும்.

பட்டு என்று தனியாக எழுதும்போது "டு" என்ற எழுத்து ஒரு மாத்திரை பெறுகிறது. இதன் பக்கத்தில் மளிகை என்கிற என்கிற சொல் வரும் போது பட்டு மளிகை என வரும். இதில் மாத்திரை ஏதும் குறையவ்¢ல்லை.

எ.டு

பட்டு + மளிகை = பட்டு மளிகை
பட்டு + வாணிபம் = பட்டு வாணிபம்
பட்டு + துணி = பட்டுத்துணி

ஆனால் பட்டு என்னும் சொல்லை அடுத்து ஆடை என்னும் சொல் வரும்போது பட்டாடை என ஆகிறது.
பட்டு + ஆடை = பட்டாடை

இதில் நிலை மொழியின்(பட்டு) கடைசி எழுத்தான (ட்+உ = டு) உ என்பதையடுத்து வருமொழியின் முதலில் ஆ என்கிற உயிர் எழுத்து வரும்போது நிலை மொழியின் ஈற்றில் உள்ள 'உ' கரம் கெட்டு ஓடுகிறது. இதனால் பட்ட்+ஆடை என வந்து பட்டாடை ஆகிறது.

எ.டு

கரும்பு + ஆலை = கரும்பாலை
மாடு + அல்ல = மாடல்ல
கேட்டு + உவந்தான் = கேட்டுவந்தான்4 (கேட்டு மகிழ்ந்தான்)

குறிப்பு : 1. உகர எழுத்துக்கள் என்பவை 'உ' உயிரெழுத்துடன் இணையும் மெய்யெழுத்துக்களைக் குறிக்கும். அதாவது கு, சு, டு, து, பு, று - இவை யாவும் குற்றியலுகர எழுத்துக்கள் எனப்படும்.

2. நிலை மொழி - முதலில் நின்று கொண்டிருக்கும் வார்த்தையை நிலை மொழி என்பர்.

3. வரும் மொழ்¢ - நிலை மொழியுடன் இணையும் அடுத்த வார்த்தையை வரும் மொழி என்பர். குற்றியலுகரத்துடன் இணையும் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாகவே இருக்கும்.

4. இதில் டு என்பதில் உள்ள உகரம் கெட்டு வருமொழ்¢யில் உள்ள உயிர் எழுத்தான
உகரம் சேர்ந்து (ட்+உ) டு என ஆகிறது. காண்பவர்களுக்கு வருமொழியில் உள்ள
உகரம் கெட்டது போல் தோன்றும். ஆனால் விதிப்படி நிலை மொழியில் உள்ள
உகரமே கெட்டது என்பதாம். எனவே பொருள் மாறுபடாமல் கேட்டு மகிழ்ந்தான்
என்றே கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றியலுகரம் வரும் மொழியிலும் 'உ'கரம்
வந்தால் மட்டுமே நிகழும்.

குற்றியல் இகரம்

குற்றியலுகரத்தின் சொற்களுக்கு முன்னால் 'ய' கர எழுத்து வரும்போது அந்த உகரம் இகரமாகத் திரிகிறது. இது தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து 1/2 மாத்திரையாக ஒலி பெறுகிறது.
நாடு என்னும் சொல்லின் முன்னே யாது என்னும் சொல் இணையும் போது நாடியாது என வரும். இதில் 'டு' என்னும் எழுத்துத்திரிந்து 'டி' என மாறி மாத்திரையிலும் குறைந்து ஒலிக்கும்.

எ.டு:-

நாடு + யாது = நாடியாது
குழலினிது + யாழினிது = குழலினிதியாழினிது
காட்டு + யானை = காட்டியானை

உகரம் இன்றியும் குற்றியலிகரம் வருவதுண்டு.

எ.டு:-

கேள் + மியா = கேண்மியா

கேண்மியா என்பதில் 'மி' குற்றியலிகரமாகக் குறைந்த ஒலி பெற்றது.
எனவே குற்றியலிகரமானது வரும் மொழியின் முதல் எழுத்தாலும் திரியப்பெறாலாம் எனத் தெரிகிறதல்லவா?

அளபெடை

உயிர் எழுத்துக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து நீட்டி ஒலிக்கும் தன்மையானால் அது "உயிர் அளபெடை" ஆகும். மெய்யெழுத்து கூடுதலாகச் சேர்ந்து ஒலிக்கப்பெறின் "ஒற்று அளபெடை" எனப்படும். (மெய் எழுத்தை ஒற்று என்பர்)

அளவு மிகுந்து ஒலிக்கும் எழுத்துக்களுக்கு அளபெடை என்று பெயர்.

"...துப்பாய தூஉம் மழை". இதில் தூஉம் என்னும் சொல்லில் தூ என்கிற நெடில் இரண்ட் மாத்திரை உடையது. இதனை அடுத்து 'உ' என்கிற உயிர் அதன் முன்னர் உள்ள 'தூ' என்கிற எழுத்தோடு கூடுதலாக ஒரு மாத்திரை கொள்ளுமாறு உள்ளது. "தூஉ" என்பது மூன்று மாத்திரை அளவு ஒலி பெறுகிறது. இந்த 'உ' உயிர் அளபெடை ஆயிற்று.

எ.டு:-

"ஏரின் உழாஅர் உழவர்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

"தெய்வம் தொழாஅள்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

" நமச்சிவாய வாஅழ்க" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

"யானை வெரூஉம் புலிதாக் குறின்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

No comments: