Sunday, July 24, 2005

மரபுக்கவிதை எழுதுவது எப்படி? - 16

அகவற்பா : -

இது ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடியாக வந்து ஈற்றடி
ஈ , ஏ , ஓ , ஆய் , ஐ , அன் என முடிவுறும் .

( எ . க ¡ )

மஞ்சள் வானம்

கொஞ்சும் தோகை

விஞ்சும் அழகு

தஞ்சம் மனமே


நிலை மண்டில ஆசிரியப்பா : -

எல்லா அடிகளும் நான்கு சீர்கள் கொண்டு ஈற்றடி " ஏ " , " என் " என்னும் ஈறு கொண்டு முடியும் .

( எ . க ¡ )

சீலமார் செல்வச் செழிப்புடன் மேவி

ஞாலமார் அறங்கள் நாட்டினில் திகழ

வள்ளுவர் காட்டும் வகையில் மகிழ்ந்து

தெள்ளிதின் வாழி ! திருவார் நிலத்தே!


இணைக்குறள் ஆசிரியப்பா : -

ஆசிரியப்பாவின் இடையில் இரண்டு சீர்களையுடைய குற ளடி நிரவி வருவது
இணைக்குறள் ஆசிரியப்பாவாகும் .

( எ . க ¡ )

தங்கும் இன்பம் நிறையப் பெற்று

எங்கும் இருக்கும் இறையே போற்றி !

கங்கை விடுத்து

எங்கள் தாகம் தீர்ப்பாய் போற்றி !

No comments: