Sunday, March 27, 2005

என்ன பயன்?

ஐந்திரு திங்கள் சுமந்த பொழுதிலும்
அரைவயிற்றோடு உணவிட்ட பொழுதிலும்
அண்ணாந்து இடுக்கிப் பார்க்கும் பொழுதிலும்
நினைக்கவில்லை அவள்..
இவனால் என்ன பயன்?

வைரம் பாய்ந்த தேகம்
வளமான வாழ்க்கை
வாழ்த்துமளவு புகழ்
இருந்தும் கேட்கிறாய் நீ
இவளால் என்ன பயன்?

இறந்த பின்பூமி கேட்கிறது
இவனால் என்ன பயன்?

No comments: