Saturday, April 02, 2005

மகுடி ஊதும் பாம்புகள்

"ஆயிரத்தில் ஒருத்தி"

"அழகான புன்னகை"

"சிந்தை கவரும் வெட்கம்"

"செங்காந்தல் விரல்கள்"

"செஞ்சாந்து பாதம்"

"அன்பிற்கு இனியவள்"

"சுட்டு விழி பார்வை"

"இல்லாத இடை"

"இடை தேடும் ஜடை"

"கொடி மலர் தேகம்"

இப்படி.......

காண இயலுபவைகளுக்கு கவர்ச்சியாய்
காணாதவைகளுக்கு கற்பனையாய்

மகுடி ஊதுமடி பெண்ணே!
இவை 'நல்ல' பாம்புகளல்ல!

உன்
சிந்தை மயங்கச்செய்து
விழுங்க காத்திருக்கும்
மலை விழுங்கிகளடி!

" விழிமின்! விழிமின்!! "

விவேகம் மிக்கவரின்
பொன்மொழியடி!

மகுடி கேட்கும்
கேட்கும் பேதையே!
இதையும் கொஞ்சம் கேளடி!
" விழிமின்! விழிமின்!! "

No comments: