Monday, April 04, 2005

இன்றும் நீ

உன்னை நினைக்காத பொழுதுகள்
உண்டென்றால் அது என்
நினைவில்லா பொழுதுகள்!
கனவில்லா தூக்கம்
தூங்கத்தான் பிடிக்கும்
உன் கனவிற்காய் தூங்குகிறேன்
பகல் பொழுதில்..

தும்மும் நேரத்தில் கூட
அனிச்சையாய் எங்கே
உன் பெயர் உதிர்ந்திடுமோ?
முகத்தை மூடிக்கொள்கிறேன்
முற்றிலுமாக..

சிறு பிள்ளையிலே
பிரியும் கணங்களிலே
வழியும் ஆறுகள் கண்களிலே
'மாறிவிட்டாய் இப்போது' என்றாய் நீ!
ஆம்! விவரம் தெரிந்தபின்
திரை மறைவில் தான் இப்போதெல்லாம்

ஆனால், நீ
இன்றும் மாறவில்லை!
அதே, கல் நெஞ்சன் தான்!!

No comments: