Monday, April 04, 2005

அங்கே எவரும் இல்லை

நீலக்கடல்...
அங்கே,
ஆரவாரமாய் அலைகள்
அமைதியாய் சில படகுகள்
அடியில் பல ஜீவன்கள்..
தூங்கிக்கொண்டு சில
தூங்காமல் சில
கண்ணுக்குத்தெரிபவை
அலைகள் மட்டுமே!
விளக்கடித்து பார்த்தால் மட்டும்
சில விஸ்வ ரூபங்கள் தெரியும்
இன்னும் இன்னும்
ஆழத்தில் இருப்பவை
கடலும் அறியாதது..
ஆனால்
அங்கே எவரும் இல்லை..
இருளைத்தவிர.

No comments: