Sunday, April 03, 2005

உறவாக வந்தவளே!

எங்கிருந்தோ வந்தாய்!
கணினி முன்னே நின்றாய்!
பாலைவன பேரிச்சையின்
நீர் உறிஞ்சிய அடி மணலாய்
வறண்டு போய் நானிருக்க
நட்புக்கரம் நீட்டி
உறவாக வந்தவளே!
நிழலைப் பிடித்து
நிஜமென்று நின்றிருக்க
முதல் நாள் துவக்கத்திலேயே
மனதுக்குள் மலையாக நிற்கின்றாய்!

என் தனிமை வெயிலுக்கு
சாமரம் வீச வந்தவளே!

எதுவும் நிரந்தரமல்ல! - இது
எனக்கு
அனுபவம் தந்த பாடமடி!

நீ எங்கோ?
நான் எங்கோ?

உன்குரல் அனுதினமும்
எனக்காக சிணுங்கும்போது
உணர்ந்தேன் நான் -என்
உறவாக வந்தவள் நீயென்று!

No comments: