Thursday, May 12, 2005

கலையாத கோலங்கள்

என் சுவாசத்தைப்போலே
உன் நினைவுகளும்
வந்து வந்து போய்
உயிர் நீதான் என
உரக்க உரைக்கும்

கண்களின் கனவுகள்
நிஜத்தை நினைத்து
கண்ணீராய் மாறி
என்னைக்
கரைத்த பின்னும்
அதன் கோலங்கள் மட்டும்
கலைவதே இல்லை

மெல்லிய ஸ்பரிசமோ
தீண்டும் தென்றலோ
தூரத்து தீபமோ
உயிரின் நாதமோ
முழுமையாய்
அனுபவித்த பிறகு
அங்கே வார்த்தைகளில்லை

அவள் அதில்
தொலைந்துபோனாள்

காவியங்கள் தொலைந்தாலும்
காதாபாத்திரங்கள் தொலையாது
ஊனுடம்பு அழிந்தாலும்
மானுடம் அழியாது
காலம் நகர்ந்தாலும்
காதல் நகராது
__________________

No comments: